Monday, June 5, 2017

NSWF பொது செயலாளரிடம் செருப்படி வாங்கிய விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலிஸ் செந்தில்நாதன்!

துணிச்சலுடன் செயல்பட்ட நமது NSWF பெண் பொதுச்செயலாளர்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த குத்தாம்பூண்டியை சேர்ந்த (கண்ணப்பசெட்டியார். செல்:9443328309) VMK பஸ் ஒனரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, 20 வருடங்களுக்குமேலாக அந்த முதலாளியின் பஸ்சில் வேலை பார்த்த இளைஞர் பாலசண்முகம், தன் உழைப்பை சுரண்டிய முதலாளியை பிரிந்து சொந்தமாக ஆட்டோ ஓட்டி பிழைத்ததை பொறுத்துக்கொள்ளாத அந்த முதலாளி தனது அடியாட்கள் மூலம் பாலசண்முகத்தின் ஆட்டோவை அடித்து உடைத்தது மட்டுமல்லாமல், பாலசண்முகத்தையும் அடித்து உதைத்து அராஜகம் செய்தார். மேலும் தனது பஸ்சில் ஆம்பிளிப்பெயரை திருடியதாக பாலசண்முகத்தின் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தது மட்டும் அல்லாமல் அவன் மீது எப்படியாவது பொய் வழக்கு பதிவு செய்யுமாறு விழுப்புரம் துணை கண்காணிப்பாளர் சங்கரிடமும், விழுப்புரம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரையிடமும், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய துணை ஆய்வாலாளர் பிரகாஷிடமும், ட்ரைனிங் துணை ஆய்வாளர் அலெக்ஸிடமும், போலீஸ் செந்தில்நாதனிடமும் பெருமளவு பணத்தை லஞ்சமாக கொடுத்ததாக தெரிய வருகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட மேற்கண்ட போலீசார் பாலசண்முகத்தின் மீது பொய்வழக்கு பதிவு செய்ததை கண்டித்த நமது NSWF அமைப்பின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி பவானியை கடந்த 31.05.2017 அன்று இரவு 10.30 மணிக்கு மேற்கு காவல் நிலையத்திற்கு நேரில் வருமாறு மேற்கு காவல்நிலைய போலீசார் செந்தில்நாதன் அழைத்தார். இதனால் அந்த வழக்கு சம்பந்தமாக பேச விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு தனியாக சென்ற வழக்கறிஞர் பவானியை பெண் என்றும் பாராமல் அவமதித்ததாலும், (இரவில் ஒரு பெண்ணை காவல்நிலையம் அழைத்ததே தவறு) போலீஸ் செந்தில் நாதன் என்பவர் வழக்கறிஞர் பவானியை அவமரியாதையாக பேசியதால் தனது செருப்பால் செந்தில்நாதனை நமது பொதுச்செயலாளர் தாக்கவேண்டியாதாகிற்று..... துணிச்சலுடன் செயல்பட்ட நமது பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பவானியை வாழ்த்துவதுடன், குஷ்டங்கோலியின் கையிலுள்ள வெண்ணையை நக்குவதற்கு ஒப்பாக மேற்கண்ட விக்கிரவாண்டியை அடுத்த குத்தாம்பூண்டியை சேர்ந்த (கண்ணப்பசெட்டியார். செல்:9443328309) VMK பஸ் ஒனரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அப்பாவி இளைஞரின் மீதும், நமது பொதுச்செயலாளர் மீதும் பொய்வழக்கு பதிவு செய்த விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசாரை வன்மையாக கண்டிக்கின்றோம். விரைவில் இதுசம்பதமாக ஆர்ப்பாட்டமும் மேற்கண்ட அனைத்து போலீசாரின் மீதும் மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கும் பதிவுசெய்யப்படும்.

Saturday, June 3, 2017

ரோடியர் பேட் - கோலத்தார் தோப்பு கிளை துணை பொருளாளர் நியமனம்!

புதுச்சேரி, ரோடியர் பேட் பகுதியை சேர்ந்த திரு சரவணகுமார் த/பெ கோபால் அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசனின் மனித உரிமைகள் பிரிவு ரோடியர் பேட் - கோலத்தார் தோப்பு கிளை துணை பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.  

ரோடியர் பேட் - கோலத்தார் தோப்பு கிளை பொருளாளர் நியமனம்!

புதுச்சேரி, ரோடியர் பேட் பகுதியை சேர்ந்த திரு அழகர்சாமி த/பெ சேவகன் அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசனின் மனித உரிமைகள் பிரிவு ரோடியர் பேட் - கோலத்தார் தோப்பு கிளை பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.   

கடலூர் மாவட்ட அனைத்து NSWF நிர்வாகிகள் கூட்டம்:


இடம்: அரசு நடுநிலைப்பள்ளி, மாளிகைமேடு (விழுப்புரம் to கடலூர் சாலை),   கடலூர் மாவட்டம்

நாள் 04.06.2017, காலை 9 மணியளவில்,

அனைத்து National Social Welfare Foundation (NSWF) நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ளவும்


Friday, June 2, 2017

ரோடியர் பேட் - கோலத்தார் தோப்பு கிளை ஆலோசகர் நியமனம்!

புதுச்சேரி, ரோடியர் பேட் பகுதியை சேர்ந்த திரு ஸ்ரீனிவாசன் த/பெ கோதண்டபாணி நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசனின் மனித உரிமைகள் பிரிவு ரோடியர் பேட் - கோலத்தார் தோப்பு கிளை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.   

ரோடியர் பேட் - கோலத்தார் தோப்பு கிளை ஆலோசகர் நியமனம்!

புதுச்சேரி, ரோடியர் பேட் பகுதியை சேர்ந்த திரு மகேஸ்வரன் த/பெ மாரிமுத்து நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசனின் மனித உரிமைகள் பிரிவு, ரோடியர் பேட் - கோலத்தார் தோப்பு கிளை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது. 

வாழ்த்த வாருங்கள்...

விழுப்புரத்திலுள்ள அனைத்து NSWF தோழர்களும் இந்த ஏழை தொழலாளி தோழரின் இல்ல விழாவில் என்னுடன் கலந்துகொண்டு நம்முள் ஏழை பணக்காரர் பாகுபாடில்லை என்பதை நிருபிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-தலைவர் NSWF