Monday, September 5, 2016

சென்னை மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் 28.08.2016:


சென்னை மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் 28.08.2016, மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

நடைபெற்ற இடம் : நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு சென்னை மண்டல தலைமை அமைப்பாளர் அவர்களின் அலுவலகம், கீழ்கட்டளை, சென்னை.

இக்கூட்டத்தில் நிறுவன தலைவர் திரு R.சிவநேசன் அவர்கள் தலைமை வகித்தார்கள், மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை அளவிலாக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மங்கள் நிறைவேற்றப்பட்டது,

1) தமிழ்நாடு மாநில இணை செயலாளர் திரு S. வெங்கடேசன்(VM00088)  இன்றுமுதல்  உறுப்பினராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2) சென்னை மண்டலத்தில் பல்வேறு பதவிகள் வகிக்கும் செயல்படாத நிர்வாகிகளை மாற்றி அவர்களுக்கு பதிலாக புதிய துடிப்பான நிர்வாகிகளை நியமிக்கும்படி தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுகின்றது.

3) நமது இயக்கத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையத்தளம் துவக்க விழாவை விழுப்புரத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

4) சென்னை மண்டலத்தில் புதியதாக பொறுப்பேற்க உள்ள நிர்வாகிகளும், ஏற்கனவே பொறுப்பில் உள்ள நிர்வாகிகளும், உறுப்பினர்களும்   ஒன்றிணைந்து நமது NSWF அமைப்புக்கு என்று புதிய அலுவலகத்தை துவக்குவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

5) மாதந்தோறும் பகுதி வாரியாக  அந்தந்த பகுதி நிர்வாகிகளை கொண்டு மாதக்கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

6) புதியதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகள், ஏற்கனவே தமக்கு மேற்ப்பதவியில் உள்ள நிர்வாகிகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கி அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.