கடந்த 14.02.2017 அன்று விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொசுக்கள் பெருகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் உள்ளிட்ட தொல்லைகள் தருவதாகவும், அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று விழுப்புரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு கொடுத்திருந்தோம்.....
நமது கோரிக்கைக்கு மதிப்பளித்து, விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, மருந்துகள் தெளிக்கப்பட்டு சுகாதாரப்பணிகளை விழுப்புரம் நகராட்சி தொடங்கியுள்ளது. நமது கோரிக்கைக்கு மதிப்பளித்து மேற்கண்ட பணிகளை தொடங்கிய விழுப்புரம் நகராட்சிக்கு நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF) சார்பாக மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Wednesday, February 22, 2017
நமது கோரிக்கையை நிறைவேற்றிய விழுப்புரம் நகராட்சி
Labels:
கோரிக்கைகள்