விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தில் உள்ள 1000 வருடங்கள் பழமையான அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் அழியும் தருவாயில் உள்ளது. ராஜ கோபுரத்தின் மீதே மரச்செடிகள் வளர்வதை படத்தில் காணலாம், மற்ற கோபுரங்களின் நிலையை தாங்களே யூகிக்க முடியும் என்று நினைக்கின்றேன். ஒரு மதில் சுவரின் மீது ஒரு பெரிய மரமே முளைத்துள்ளதை படத்தில் காணலாம். உண்டியல் பணத்தின் மீது கவனம் செலுத்தும் இந்து அறநிலையத்துறை கோவிலை பாதுகாக்க தவறி வருவது வேதனையளிக்கின்றது. கோவிலை பாதுகாக்க தவறிய இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக கோவிலை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்
- ர.சிவனேசன், தலைவர் NSWF
National Social Welfare Foundation
- ர.சிவனேசன், தலைவர் NSWF
National Social Welfare Foundation