Sunday, March 27, 2016
சென்னை மண்டல NSWF நிர்வாகிகள் கூட்டம்
இக்கூட்டத்திற்கு சென்னை மண்டல தலைமை அமைப்பாளர் திரு.குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாநில செயலர் திரு.ஜெயக்குமார், மாநில துணை செயலர் திரு.செல்லப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்த கொண்டனர். சென்னை மண்டலத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
சென்னை மண்டலத்தில் தலைசிறந்த மருத்துவர்களைக்கொண்டு நமது NSWF அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Saturday, March 26, 2016
NSWF LEADERS MEETING MARCH -2016
DATE: 27.03.2016, SUNDAY, 03.00 PM.
PLACE: Sri Balamurugan Residency, New bus stop opposite, villupuram. Inform to everyone, We invites all
Friday, March 25, 2016
Wednesday, March 23, 2016
Rules and Regulations for membership
Important information to all NSWF members and Leaders:
>>Don't hold membership applications with you. If hold more than 10 days, application will be rejected and rejection information will send to applicant.
>>All the members can check whether your id card is original or not by checking your membership details in our official website www.nswflegal.com from next month onwards
>>All new membership applications will enquiries by president or head office staff. If misuse found, the member or Leader who misused will permanently Dismissed from NSWF
>>The leaders who are not participate the organization development activities will be disqualified to as a member
All NSWF members and leaders should keep this conditions in mind
Saturday, March 12, 2016
Meeting
National Social Welfare Foundation (NSWF)
Meeting venue :AMBIGAI MINI HALL no:59 medavakkam main road, keelkattalai, chennai :600117
Date :13.03.2016 (sunday )10am to 12 pm, 9841334195 it's important meeting. please attend the meeting. We invite all the members of NSWF.
THANKING YOU
REGARDS
V KUMAR
CHIEF ORGANISER CHENNAI ZONE
Tuesday, March 1, 2016
அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம்
அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம்
----------------------------------------------------------
கடந்த 31.01.2016 அன்று NSWF அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நிர்வாக சீரமைப்பு கூட்டம் விழுப்புரம் பாலமுருகன் கூட்ட மண்டபத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அமைப்பின் நிறுவன தலைவர் திரு ர.சிவநேசன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு ச.ஜெயகுமார்( நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு மாநில செயலாளர்), திரு ஜெயவிருதகிரி (மாநில துணை செயலாளர் ), திரு செல்லப்பன் (மாநில துணை செயலாளர் ), திரு ஸ்ரீனுவாசன் (மாநில செயற்குழு ), திரு ரவிச்சந்திரன்(மாநில கொள்கை பரப்பு செயலாளர் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மண்டல, மாவட்ட, தொகுதி,ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட பலவாறு பதவிகளை வகிக்கும் நிர்வாகிகளான திரு குமார், திரு ஐய்யப்பன், திரு சக்திவேல், திரு திருமதி மாரியம்மாள், திருமதி சந்திரகலா, திரு பாபு ராம், திரு மகேந்திரன், திரு நாராயணன், திரு புருஷோத்தமன், திரு தனசேகர், திரு செல்வம், திரு முருகன், திரு ஜகதீஷ், திரு ராமதாஸ், திரு பழனி, திரு ஆனந்த், திரு நந்தா, திரு சுந்தரராமன், திரு முருகன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
(i) காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்த திரு குமார் அவர்கள் சென்னை மண்டல தலைமை அமைப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார்.
(ii) அமைப்பில் 1) விழுப்புரம் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு சுப்பிரமணி, 2) விழுப்புரம் வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் திரு ஹென்றி ஜோசப், 3) ஸ்ரீபெரும்புதூர் நகர கிளை அமைப்பாளர் திரு மணிகண்டன், 4) தி.நகர் நகர கிளை அமைப்பாளர் முரளிதரன் , 5) திருபோரூர் நகர கிளை அமைப்பாளர் சத்தியராஜ் ஆகியோர் பதவி பெற்ற பின்னரும் பல மாதங்களாக அமைப்பின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் பணியாற்றாததால் இன்று முதல் தங்கள் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு சாதாரண அடிப்படை உறுப்பினராக மாற்றப்பட்டனர்.
(iii) மேலும் இதுவரை செயல்படாத விழுப்புரம், சேலம், வேலூர், கடலூர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மேலும் சிலகாலம் அவகாசம் வழங்குவது என்றும், இதற்க்கு பின்னரும் செயல்படவில்லையெனில் அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
(iv) அமைப்பின் சார்பாக மாவட்டம் மாவட்டமாக இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்துவது, வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது, மருத்துவ முகாம் நடத்துவது, யோகா பயிற்சி முகாம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
(V) அமைப்பின் சார்பாக மாவட்டம் தோறும் மாவட்ட மாநாடுகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக விழுப்புரம் மண்டல அமைப்பாளர் திரு ஐயப்பன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.





























