Thursday, October 15, 2015

விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

இடம்: பாலமுருகன் ரெசிடென்சி ,விழுப்புரம்
நாள்: 11.10.2015, ஞாயிறு காலை 11.30 மணி முதல் மாலை 3 மணி வரை

தலைமை: நிறுவனர் மற்றும் தலைவர் திரு. சிவநேசன்

முன்னிலை: திரு. ஜெய விருத்தகிரி, மாநில துணை செயலாளர்,
திரு. செல்லப்பன், மாநில துணை செயலாளர்,
திரு. வெங்கடேசன், மாநில இணை செயலாளர்,
திரு. ரவிச்சந்திரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர்,
திரு. வெங்கடேசன், புதுவை மாநில இளைஞர் அணி துணை செயலாளர்

கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்:
திரு. மகேந்திரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர், திரு. சக்திவேல், கடலூர் மண்டல துணை செயலாளர், திரு. சுப்பிரமணி, விழுப்புரம் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர், திரு. மணி, திரு. ரவிராஜ்

இக்கூட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் எவ்வாறு மக்கள் பணியாற்றுவது மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. நமது தலைவர் மற்றும் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

1. மனித உரிமை மீறல்களை எவ்வாறு தடுப்பது என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் 3 மாதத்திற்கு ஒருமுறை பயிற்சி வகுப்புகள் நடத்துவது,

2. மிக விரைவாக புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது,

3. வருகின்ற 01.11.2015 அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் பகுதி உறுப்பினர்களை அழைத்து வருவது,

4. ஒவ்வொரு கிளையும் தங்கள் கிளை கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒருமுறையாவது நடத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது,

5. அமைப்பின் சார்பாக யோகா பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து கலந்தாலோசிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது,

6. அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர NSWF உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பாடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது,

7. ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெற அமைப்பு உதவுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்கள் கலந்துகொண்ட அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.