Monday, March 28, 2016

விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்:





இன்று (27.03.2016) மாலை 4.30 மணியளவில் விழுப்புரம் மாவட்ட என்.எஸ்.டபுள்யு.எப் (NSWF) நிர்வாகிகள் கூட்டம்,  விழுப்புரம்-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள K.R. பிளாசா, விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நிறுவனர் & தலைவர் திரு.சிவனேசன் தலைமை வகித்தார்.
புதுவை மாநில சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திரு.உத்திராடம்,  மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.ரவிச்சந்திரன், மாநில துணைச்செயலாளர்கள் திரு.ஜெயவிருதகிரி, திரு.செல்லப்பன், மாநில இணைச்செயலாளர் திரு.வெங்கடேசன், கடலூர் மண்டல துணை அமைப்பாளர் திரு.சக்திவேல், விழுப்புரம் மண்டல அமைப்பாளர் திரு.அய்யப்பன், சட்ட ஆலோசகர் திரு.துரைராஜ், விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.மாரியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் (i)கிளைகள் தோரும் கூட்டங்கள் நடத்துவது, (ii)தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துவது, (iii)அமைப்பின் நிதிநிலையை உயர்த்துவது, (iv)கிளைகள்தோரும் இலவச சட்ட பயிற்சி முகாம் நடத்துவது,  (v) அமைப்பில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.