சேலம் மாவட்டம், மேட்டுரை அடுத்த கோணூரில் இயங்கி வரும் திருவாங்கூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், தங்களை ஆலோசிக்காமலும், தங்களுக்கு சேரவேண்டிய பணி பயன்களை கொடுக்க மறுத்தும் தொழிற்சாலையை இழுத்து மூடியதால் , பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மேற்கண்ட தொழிற்சாலையின் சொத்துக்களை முடக்கி தங்களுக்கு சேர வேண்டிய பணிப்பயன்களை பெற்றுத்தர வேண்டி நமது NSWF அமைப்பிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேற்கண்ட கோரிக்கை மனுமீதான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று NSWF அறிவித்துள்ளது.