Thursday, September 12, 2024

*திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்திற்கு தேசிய சமூகநல அமைப்பின் (NSWF) கோரிக்கை கோரிக்கை மனு (நாள்:09.09.2024)....*



இந்த இந்த புகைப்படங்கள் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், திண்டிவனம் to புதுச்சேரி செல்லும் சாலையில் மரக்காணம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள பைபாஸ் பாலத்திற்கு கீழே உள்ள கழிவு நீர் கால்வாய் மூடி உடைந்து சுரங்கப்பாதை போல் காட்சியளிக்கும் இந்த பள்ளம் மிகவும் ஆபத்தான பள்ளமாக உள்ளது. இந்த கால்வாயில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிலர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து பல பேருக்கு பலத்த காயப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர். எனவே பொது மக்களை காக்க திண்டிவனம் நகராட்சி அலுவலர் அவர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தரமான மூடி போட்டு  மூடினால் அந்த வழியே செல்லும் மக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு வேலு மாவட்ட இணைத் தலைவர் டாக்டர் திரு பாலசுப்ரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் *தேசிய சமூக நல அமைப்பின் (NSWF)* சார்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்! 🙏🙏🙏

#nswf #nswflegal #shivanesan #shivanesanranganathan #humanrighta #socialservice #anticorruption