மனு
அமையப்பெரும் அஞ்சல்:
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு,
மற்றும்
ஆச்சிறுப்பாக்கம் மின் நிலைய பொறியாளர் அவர்களுக்கு,
மூலம்:
மனித உரிமை பிரிவு,
தேசிய சமூக நல அமைப்பு (NSWF),
செங்கல்பட்டு மாவட்டம்.
தலைப்பு: 10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் மாணவிக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை
மதிப்பிற்குரியவர்களே,
இத்துடன் அச்சிறுப்பாக்கம் மலைநகர் பகுதியைச் சேர்ந்த மாணவி டேஷ்னா ஸ்ரீ என்பவர் சார்பாக ஒரு மனுவை சமர்ப்பிக்கின்றோம்.
இந்த மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இவர் அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.
தாயார் பெயர்: திருமதி. கீதா
தந்தையார் பெயர்: திரு. சக்திவேல்
முகவரி: மலைநகர், அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்
இந்த மாணவியின் வீடு கடந்த 10 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி உள்ளது. மிகவும் பொருளாதார பின்னடைவில் உள்ள குடும்பமாகும். கல்வியில் சிறந்து விளங்கும் இந்த மாணவி, மின்சாரம் இல்லாத சூழலில் அதிக சிரமத்துடன் படித்து வருகின்றார்.
பல முறை மாணவியின் தந்தை திரு. சக்திவேல் அவரால் மின் இணைப்புக்காக கடிதம் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரியது.
எனவே, மாணவியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் உரிமையான வசதிகள் வழங்கப்படும் வகையில், அவரது வீட்டுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
அன்புடன்,
மனித உரிமை பிரிவு,
தேசிய சமூக நல அமைப்பு (NSWF),
செங்கல்பட்டு மாவட்டக் குழு.
தேதி: 21.05.2025