Friday, May 16, 2025

NSWF செங்கல்பட்டு மாவட்ட செயல்பாடுகள்!

*மக்கள் நலனுக்காக NSWF அமைப்பின் முயற்சி – தேங்கி நிற்கும் தண்ணீர் சிக்கலுக்கு தற்காலிக தீர்வு! (16.05.2025)*

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட எலப்பாக்கம் சாலை – மழை மலை மாதா கோவில் தெருவில் உள்ள அரசு பொது கழிப்பறைக்கு எதிரே கடந்த நாட்களில் பெரும் பள்ளம் உருவாகி, அதில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சுகாதாரமும், மக்கள் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகி, அந்த வழியாக தினமும் பயணம் செய்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், NSWF – தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவினர் மக்கள் சார்பாக முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்தனர். *மாவட்ட தலைவர் திரு. மு. வேலு, துணை பொருளாளர் திரு. ஏஜஸ்,* மற்றும் குழுவின் உறுப்பினர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து, அவசர நடவடிக்கைகளை கோரினர்.

இந்த மனு அடிப்படையில் அதிகாரிகள் தற்காலிகமாக அதற்கு தீர்வாக பள்ளத்தை சமன்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர். கீழே உள்ள புகைப்படம், அந்த சீரமைப்பு பணி நடைபெற்ற பிறகு எடுத்ததாகும்:



பழைய நிலைமையில் கொசுக்கள் பெருகும் வகையில் மழைநீர் குவிந்து, அருகிலுள்ள சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள், ஏழை மக்கள் மற்றும் இருசக்கர வாகன பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது சீரமைக்கப்பட்டாலும், இது நிரந்தர தீர்வாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என NSWF அமைப்பு வலியுறுத்துகிறது.

அந்த பகுதியில்:

பள்ளத்தை முறையாக அடைக்கும் பணி

சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிப்பு

சுத்தமாக்கும் பணி

முடிவடையும்வரை அமைப்பின் ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்குமென அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

*மக்கள் நலனுக்காக சத்தமில்லாமல் செயலாற்றும் NSWF அமைப்பின் இந்த முயற்சி, மற்ற சமூக அமைப்புகளுக்கும் முன்னுதாரணமாக அமைகிறது.*

*NSWF – மக்கள் நலனுக்காக என்றும் முன்னிலையிலே!*