*NSWF தேசிய சமூக நல அமைப்பின் சார்பில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!*
செங்கல்பட்டு: வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழா மற்றும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா ஏற்பாடுகள் குறித்து, NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமைப் பிரிவின் செங்கல்பட்டு மாவட்டக் குழுவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் கடந்த 3/8/2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு குழுத் தலைவர் *திரு. சுந்தரம் ஐயா* தலைமை தாங்கினார். நகரத் தலைவர் *திரு. லோகநாதன்*, மாவட்டச் செயலாளர் *திரு. வெங்கடகிருஷ்ணன்*, மாவட்டப் பொருளாளர் *திரு. அல்லா பாஷா*, துணைப் பொருளாளர் *திரு. ஏஜாஸ்* மற்றும் மாவட்டத் தலைவர் *டாக்டர் திரு. மு. வேலு* உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, விழாவின் வரவேற்பாளர்களாக மாவட்டச் செயலாளர் திரு. வெங்கடகிருஷ்ணன் மற்றும் துணைச் செயலாளர் திரு. பிரபாகரன் ஆகியோர் செயல்படுவார்கள்.
விழாவிற்கு வருகை தருபவர்களின் ஆவணங்களைச் சேகரிக்கும் பொறுப்பை மாவட்டத் துணைப் பொருளாளர் திரு. ஏஜாஸ் மற்றும் அச்சரப்பாக்கம் ஒன்றியச் செயலாளர் திரு. பிரபுராஜ் ஆகியோர் ஏற்றுள்ளனர்.
காலை உணவு வழங்கும் பொறுப்பு, மாவட்டப் பொருளாளர் திரு. அல்லா பாஷா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் திரு. ஆறுமுகம், மாவட்டத் தொண்டர் அணி துணைத் தலைவர் திரு. முரளிதரன், சித்தாமூர் ஒன்றியத் தலைவர் திரு. கிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.