Sunday, August 13, 2017

ஒரு ஏழையை நல்லடக்கம் செய்ய உதவிய காவல்துறைக்கும், விக்கிரவாண்டி ஜமாத் தலைவருக்கும், தோழர்களுக்கும் NSWF சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!

அந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த திரு முனில்பாஷா (வயது 45) கடந்த 11.08.2017 அன்று பயணத்தின் போது விழுப்புரம் ரயில்வே நடைமேடையில் திடீர் மாரடைப்பால்   மரணமடைந்தார். இவருடன் பயணம் செய்த இவரது மனைவி வறுமையின் காரணமாக கையில் பணமின்றி,  சடலத்தை தன் சொந்த ஊருக்கும் கொண்டுசெல்ல வழியின்றி தவித்தார். நமது NSWF திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி திரு நந்தக்குமார் மற்றும் உறுப்புனர்    ரியாஸ்பாய் மூலம் நமக்கு தெரியவந்தது. வளவனூர் ஜமாத் தோழர்களின் வழிகாட்டலுடன் விக்கிரவாண்டி ஜமாத் உதவியுடனும், காவல்துறை உதவியுடனும் அன்று மாலையே விக்கிரவாண்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒரு ஏழையை நல்லடக்கம் செய்ய உதவிய காவல்துறைக்கும், விக்கிரவாண்டி ஜமாத் தலைவருக்கும் மேற்கண்ட தோழர்களுக்கும் NSWF சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

~ ர.சிவனேசன்
நிறுவனர் & தலைவர்,
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)