Monday, July 29, 2024
இந்தியா ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு!
27/7/2024 சனிக்கிழமை அன்று நமது *இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஏவுகணை நாயகன் ஐயா A. P. J அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை* நினைவு கூறும் வகையில் நமது NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் அச்சிறுப்பாக்கத்தில் ஐயா அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நேட், புத்தகம், பேனா, பென்சில் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு வேலு, மாவட்ட செயலாளர் திரு வெங்கடகிருஷ்ணன், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தலைவர் திரு அல்லா பாஷா, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் திரு ரசுல், நகர தலைவர் திரு லோகநாதன் நகர உறுப்பினர் திரு பிரபு ராஜ், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் நெடுங்கல் ஊராட்சி கிளை உறுப்பினர் திரு ஏழுமலை ஆகிய அனைவருக்கும் *தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) தலைமையகம்* சார்பாக வாழ்த்துக்கள் மற்றும்பாராட்டுக்கள்!