Thursday, November 7, 2024

தமிழக அரசுக்கு கோரிக்கை!

*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட  ஆட்சியர் அவர்களுக்கும் கோரிக்கை! (நாள்:07.11.2025)*

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட விஷக் காய்ச்சல்கள் பரவி வருகிறது ...
இது சம்பந்தமாக எங்களது தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) செய்யூர் வட்டம்,  தேவராஜபுரம் கிளை தலைவர் திரு ராஜகுரு உள்ளிட்ட பொதுமக்கள்  அப்பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை வாய்மொழியாக கோரிக்கை வைத்திருந்தனர்... ஆனால் அதிகாரிகளின் மெத்தனம், அலட்சியம், அதிகாரப் போக்கினால் கடமையை செய்ய தவறியதின் காரணத்தினால் கோரிக்கை விடுத்த பொது மக்களில் ஒருவரான தேசிய சமூக நல அமைப்பின் செய்யூர் வட்டம், தேவராஜபுரம் கிளை ராஜ குரு அவர்களின் 6 வயது மகள் யாத்திகா  கடந்த 05.11.2024 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
சுகாதார சீர்கேட்டின் காரணமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு யாத்திகா இறந்துவிட்டார் என்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அறிக்கை கொடுத்துள்ளது. புகார் அளித்தும் அதன் மீது சரியான நடவடிக்கை எடுக்காத ஒரு உயிர் போவதற்கு காரணமாக அமைந்த சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து உயிரிழந்த யாத்திகாவின் குடும்பத்திற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மேலும் அப்பகுதியில் இனி எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாத வகையில் சுகாதார சீர்கேட்டை சரி செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களை காக்க வேண்டும் என்று *தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்* சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்!