*தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*
*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் கோரிக்கை! (நாள்:05.11.2025)*
விழுப்புரம் மாவட்டம், பள்ளியந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடநாயக்கன் குட்டையில் தான் (புறம்போக்கு சர்வே எண் :179 ) ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பது மட்டுமல்லாமல் அதன் பின்னே அமைந்த 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கெடார் ஊராட்சி சர்வே எண்: 446/1 தோப்பு புறம்போக்கு வழியாக தான் சென்று விவசாயம் மேற்கொள்ள முடியும். மேலும் கால்நடைகளை அவ்வழியாக தான் கூட்டி சென்று மேற்கண்ட குட்டையில் தண்ணீர் கொடுத்து பராமரிக்க முடியும். மேலும் அறுவடை, விதைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவ்வழியாக சென்று தான் மேற்கொள்ள முடியும். தற்போது விவசாயிகளும் கால்நடைகளும் செல்லும் அந்தப் பாதையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியின் தடுப்பு சுவர் அமைத்து அந்தப் பாதையை தடுப்பதால் 50 ஏக்கர் விவசாய நிலங்களும் கால்நடைகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் எனவே இதனை மனதில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மதிப்புமிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களும் இதில் தலையிட்டு விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஒதுக்கி தடுப்பு சுவர் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் ...
*ர.சிவனேசன்*
~நிறுவனர் மற்றும் தலைவர்