*NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை!*
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட அரசு சுகாதாரத்துறை அதிகாரி அவர்களுக்கும் வணகக்கம்!
மேற்கண்ட இந்த மருத்துவ சீட்டு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்-ல் உள்ள தனிநபர் நடத்தும் *கிரசன்ட் கிளினிக்* என்ற பெயரில் ஒரு மருத்துவமனை உள்ளது.
30/10/2024 அன்று செய்யூர் பகுதியைச் சார்ந்த ராஜகுரு அவர்களின் மகள் யாத்திகாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று அந்த மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அந்தக் குழந்தை யாத்திரிக்காவை பரிசோதனை ஏதும் செய்யாமலேயே இவர்கள் கூறியதை வைத்து அந்த குழந்தைக்கு ஊசி போட்டு அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி மாத்திரையும் வழங்கியுள்ளனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர் ஆனால் இரண்டு நாட்களில் குழந்தை உடல் நிலைமை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பெற்றோர் அந்த மருத்துவரை அணுகி கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை குழந்தை காய்ச்சலால் அப்படி உள்ளது சரியாகிவிடும் என்று அப்போதும் பரிசோதிக்காமல் சில ஆறுதலான வார்த்தைகளை கூறி அனுப்பி உள்ளனர்.
ஆனால் குழந்தைக்கு உடல் மிகவும் பாதிக்கப்பட்டதால் குழந்தையின் பெற்றோர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் குழந்தை சிகிச்சை பலன் இல்லாமல் 05/11/2024 அன்று இறந்துவிட்டார். அதனை அறிந்ததும் எங்கள் NSWF அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கூறியது எங்கள் குழந்தையை முதலில் இந்த மருத்துவரிடம் காட்டியுள்ளோம் இந்த மருத்துவர் சரியான பரிசோதனை செய்யவும் இல்லை குழந்தையின் நிலைமையை எங்களிடம் கூறவும் இல்லை என்று கூறினார்கள்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் முதலில் கிரசென்ட் கிளினிக் மருத்துவமனையில் பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறோம்... எனவே ஐயா அவர்கள் குழந்தை யாத்திகாவின்
இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ள கிரசன்ட் கிளினிக் நடத்தி வரும் மருத்துவரையும், யாத்திகா குழந்தையின் பெற்றோர்களையும் முறையாக விசாரணை செய்து மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் நன்றி 🙏