*நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சிவகாசி உறுப்பினருக்கு உரிய நிவாரணம் சட்டபூர்வமாக பெற்று தரப்பட்டது (நாள்25.11.2024)*
கொங்கலாபுரம், சிவகாசி தாலுகாவை சேர்ந்த நமது அமைப்பின் உறுப்பினர் முத்துலட்சுமி (வயது:44) க/பெ முத்துவேல் பாண்டியன் என்பவர் 30.05.2024 அன்று தனது ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசி அடித்து மானபங்கம் செய்த நபர்கள் மீது கொடுத்த புகாரில் தனக்கு சிவகாசி நகர காவல் நிலையத்தில் புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு சரியான நடவடிக்கை எடுக்க உதவ வேண்டி நமது அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் நேற்று (25.11.2024) தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் அமைப்பின் சார்பாக நீதிபதிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி நீதிபதிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது! உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பித்த SC&ST ஆணைய நீதிபதிகளுக்கு தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!