*தேசிய சமூக அமைப்பு (NSWF) -இன் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை நிறைவேற்றம்! பதிவு நாள்:30/10/2024*
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், நெடுங்கள் கிராமம், நேதாஜி தெருவில் உள்ள மின்விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும்
NSWF அமைப்பின் *நெடுங்கல் கிளை தலைவர் திரு.ஏழுமலை* அவர்கள் நமது அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்,
அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) அவர்களிடம் அமைப்பின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
நமது கோரிக்கை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும் அந்த தெருவில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் சரி செய்துவிட்டனர்.
எங்களது கோரிக்கையை ஏற்று துரிதமாக நடவடிக்கை எடுத்த B.D.O. அவர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேற்கண்ட பொது சேவையில் ஈடுபட்டு பொது மக்களின் தேவையை உரிய அதிகாரியிடன் தெரிவித்து அதனை பொதுமக்களுக்காக நிறைவேற்றிக் கொடுத்த நமது தேசிய சமூக நல அமைப்பின் *செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் திரு மு வேலு அவர்களுக்கும் மற்றும் மாவட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும்* இதயம் கனிந்த பாராட்டுக்கள்...
*~தேசிய தலைவர், NSWF*