கடந்த 10/10/2024 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின், மனித உரிமை பிரிவின், செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பாக அச்சிறுப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்களிடம் அச்சரப்பாக்கத்தில் உள்ள குறிப்பிட்ட இரு பகுதிகளில் கடந்த 2010 - 2024 வரை நடந்த விபத்துக்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். காவல் அதிகாரி அவர்கள் நமது மனுவை ஏற்றுக்கொண்டு மூன்று தினங்களில் பதில் அளிப்பதாக உறுதியளித்தார். இந்த பணியில் ஈடுபட்ட அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் Dr மு.வேலு, மாவட்ட செயலாளர் Dr வெங்கடகிருஷ்ணன், துணை பொருளாளர் திரு ஏஜாஸ் ஆகியோருக்கு தேசிய தலைமையகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.