Friday, October 18, 2024

நீக்கம் நடவடிக்கை!

*தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*


                        *நீக்கம் அறிவிப்பு!(17.10.2024)*

நமது அமைப்பில் சரியாக செயல்படத காரணத்தினாலும், நமது அமைப்பு பெயரை பயன்படுத்தி மற்ற அமைப்பை வளர்க்க பாடுபட்டதாலும், ஒரு காலத்திலும் நமது அமைப்புக்கு விசுவாசமாக இல்லாத காரணத்தினாலும், தனக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு காத்துக் கொள்ளவே ஒரு தடுப்பணையாக மட்டுமே பயன்படுத்தியதாலும், மற்ற அமைப்புகளுக்கு பல கூட்டங்களின் நடத்திய இவர் நமது அமைப்புக்கு ஒரு கூட்டம் கூட இதுவரை பல வருடங்களாக நடத்தாமல் பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வந்தாலும் மற்ற அமைப்பு பலப்படுத்த போலியான வாக்குறுதி கொடுத்து நமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி மற்ற அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாலும் .....

ஏற்கனவே இருமுறை நீக்கப்பட்டும் மீண்டும் மன்னிப்பு கொடுத்து சேர்க்கப்பட்டும் திருந்தாமல் லோன் வாங்கி தருவேன் பணம் வாங்கி தருவேன் என்று மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக வந்த தகவலை அடுத்தும்...

இவர் அமைப்புக்கு எவ்விதமான பயனும் இல்லை என்பது உறுதியானதாலும் ....

தன்னால் ஒரு கூட்டம் கூட நடத்த முடியாவிட்டாலும் மற்றவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வருவதாலும் ...

ஏற்கனவே இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் ...

ஒரு காலத்திலும் அமைப்புக்கு உண்மையாக செயல்பட மாட்டார் என்று தீர்க்கமாக நம்புவதாலும் ....

இவர் ஆயுட்காலம் முழுவதும் (NSWF) அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகின்றார்...

இனி நீக்கப்பட்ட இவர்க்கும் அமைப்புக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.  

அமைப்பு சம்பந்தமான எவ்விதமான விஷயங்களிலும் இவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அமைப்பின் அங்கத்தினர் அனைவரரும் கேட்டுக் கொல்லப்படுகிறார்கள் ....

முதல் நீக்கமாக,

திரு செல்லப்பன் மரக்காணம் மாநில துணை செயலாளராக பதவி வழங்கப்பட்டது.  

இவர் தலைமையை ஆலோசிக்காமல் தானாகவே லெட்டர் பேட் அடித்தது,  மற்ற நிறுவனத்திற்கு லோன் வாங்கி தருவதாக நமது அமைப்பின் பெயரை காட்டி நான் இங்கே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வது ... மக்களிடம் போலியான வாக்குறுதியை கொடுத்து தலைமைக்கு தெரியாமல் மறைத்தது....தானாக முன்வந்து ஒரு கூட்டம் கூட இதுவரை நடத்தாதது... மற்ற நிர்வாகிகள் நடத்தும் கூட்டங்களில் அவர்களுடைய அழைப்பினை ஏற்று அந்த கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவித்தது... உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடாமல் மற்ற அமைப்புகளுக்கு உறுப்பினர் சேர்க்கையில் நமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி சேர்ப்பது.  அமைப்புக்கு விசுவாசம் இல்லாமல் இருப்பது ... பொதுமக்களை ஏமாற்றுவது ... கொடுத்த மன்னிப்பை ஏற்று முழுமையாக செயல்படாமல் இருப்பது ...

இனி திருத்தவே முடியாது திருந்தவே மாட்டார் என்ற காரணத்தினால் அவருக்கு ஆயுள் உள்ளவரை தேசிய சமூக நல அமைப்பில்(NSWF) அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எவ்விதமான பொறுப்பும் கிடையாது.

திரு செல்லப்பன் அவர்களின் செயல்பாடுகளுக்கு தேசிய சமூக நல அமைப்பு எவ்விதமான பொறுப்பும் ஏற்காது. தேசிய சமூக அமைப்பின் பெயரை பயன்படுத்தினால் பொதுமக்கள் உடனடியாக தெரிவித்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!