தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) அனைத்து தோழர்களுக்கும் வணக்கம்!
*உங்களுள் இருக்கும் சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவே இந்த பதிவு!*
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பட்டமும் பதவியும் வழங்குகிறீர்கள் என்ற உங்களுடைய கேள்விக்கு பதில் ....
அவர்கள் பல ஆண்டுகளாக அமைப்புக்கு விசுவாசமாகவும், அமைப்பை முன்னெடுக்கவும், அமைப்புடைய வளர்ச்சி பணிக்காகவும் உழைத்தவர்கள் ...
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சொந்த உழைப்பில் அமைப்பை வளர்ப்பதற்காக பாடுபட்டவர்கள் ...
அமைப்பின் கடினமான காலங்களில் அமைப்புக்காக உறுதுணையாக நின்றவர்கள் ...
அவர்களுடைய செயல்பாடுகளை பதிவிடாமல் மற்றவர்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மற்றவர்களுக்கும் முக்கியதுவம் கொடுத்தும் அவர்கள் தொடர்ந்து செயலாற்றினார்கள் ...
அமைப்பை தனது உயிர் மூச்சு என நேசிக்கிறார்கள் ....
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் மிக மிக தகுதி உடையது ....
உங்களுக்கும் மதிப்பளிக்க அமைப்பு தயாராக உள்ளது ... அமைப்பின் வளர்ச்சி பணிகள், சமூக சேவை, உறுப்பினர் சேர்க்கை, கூட்டங்கள் நடத்துவது மற்றும் கலந்து கொள்வது அமைப்பின் செயல்பாடுகளை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து புரிய வைப்பது ....
அமைப்பில் உள்ளவர்கள் உண்மையான விசுவாசிகளா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அமைப்பின் வளர்ச்சி பணிகள் குறித்து பயிற்சி அளிப்பது ...
உள்ளிட்ட எல்லா செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கினால் அவருக்கும் உரிய பட்டம், பதவி வழங்கப்படும் ...
சிலர் வருடக்கணக்கில் தன்னுடைய அடையாள அட்டையை கூட புதுப்பிக்காமல் தனக்கும் உரிய அங்கீகாரம் வேண்டும் என்று கேட்பது அநாகரிகமானது. நான் மிக உயர்ந்த பதவியில் உள்ளேன் ஆனால் நான் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை அமைப்பில் உள்ள எந்த உறுப்பினரும் நிர்வாகியும் எனக்கு சேவை செய்யவில்லை அவர்களுக்கு மேல் பதவியில் நான் உள்ளேன். என்னால் ஒரு உறுப்பினர் கூட சேர்க்க இயலாது. என்னை மதித்து யாரும் அமைப்பில் உறுப்பினராக இணைய மாட்டார் ...
போன்ற எண்ணம் உடையவர்கள் அனைவரும் உறுப்பினராக இன்று முதல் விலகிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ...
அமைப்பை பலப்படுத்த செயல்படுங்கள் அல்லது விலகி விடுங்கள் ....
ஒவ்வொருடைய செயல்பாடுகளும் அங்கீகரிக்கப்படும் ...காலதாமதம் ஏற்படினும் அவருடைய அங்கீகாரம் அவரைத் தேடி வரும் ...
அமைப்பின்பால் அன்பு கொண்ட விசுவாசிகளுக்கு மட்டுமே அமைப்பில் அங்கீகாரம் உண்டு ... மற்றவர்கள் பொறாமை கொள்ளாமல் செயல்பாட்டில் தாங்கள் தகுதியானவர்கள் என்று நிரூபிக்கவும் ...
அமைப்பின்பால் நீங்கள் அனைவரும் ஒன்றே!
*வெற்றி நமதே! வாழ்க வளமுடன் !!*