*தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை!*
மனு
நாள் 28/10/2024
புகார்.
சாலை சீரமைத்தல் வேண்டிய பதிவு.
தேசிய
நெடுஞ்சாலைத் துறை அதிகாரி அவர்களுக்கு அன்பான வணக்கம்.
இதோ நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படங்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஆச்சிறுப்பாக்கம் ஒன்றியம் சென்னை To திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டது.
தொழுப்பேடு பஸ் ஸ்டாப் அருகில் இருசக்கர வாகனம் செல்லும் பாதை ஓரத்தில் சுமார் 5 இடங்களில் பெரிய பள்ளம் உள்ளது.
அந்த வழியில் செல்லும் இரு சக்கர வாகனங்கள்
பள்ளம் இருப்பது அறியாமல் இரவு நேரங்களில் பலர் கீழே விழுந்து பலத்த காயமடைந்து உள்ளனர்.
அதில் ஒரு சிலர் இறந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மக்களின் மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த பள்ளங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று
எங்கள் NSWF அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் திரு சிவனேசன்
மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் மு.வேலு, மாவட்ட இணைத் தலைவர் டாக்டர் திரு பாலசுப்ரமணியன், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளார்கள்....